அத்துவான வெளியில்
சிலுவையென கரம் விரித்து
கண் மூடி…ஏதேனும் ஒரு பறவையின்
எச்சம் பட்டு புனிதப்பட…__________________________________________
சிலுவையென கரம் விரித்து
கண் மூடி…ஏதேனும் ஒரு பறவையின்
எச்சம் பட்டு புனிதப்பட…__________________________________________
நீங்கள் மலத்தை மிதித்த செருப்பினால்
என்னை அடித்துவிட்டுப் போங்கள்…புகலிடம் தந்த..என் ஊனத்திர்க்கு உச்ச் கொட்டிய…சோத்துப் பொட்டலத்தை தரையில் வீசிய
விமானத்தில் வந்த
தெரு மனிதர்களே…நீங்கள் மலத்தை மிதித்த செருப்பினால்
என்னை…
__________________________________________
அது தூங்குவதைப்போலவே செத்துக்கிடந்ததென்றும்
அது தன் வீட்டில் வளர்ந்த லஷ்மியைப் போல என
கண் கலங்கி…சாப்பிட
வேலை செய்ய
கலைந்த தலையைக் கோதிக்கொள்ளக் கூட
முடியாமல் போனதாய்
யோகாவிடம்
சங்கரிடம்
ஜோசபிடம்
புலம்பி…
அது தன் வீட்டில் வளர்ந்த லஷ்மியைப் போல என
கண் கலங்கி…சாப்பிட
வேலை செய்ய
கலைந்த தலையைக் கோதிக்கொள்ளக் கூட
முடியாமல் போனதாய்
யோகாவிடம்
சங்கரிடம்
ஜோசபிடம்
புலம்பி…
வீடு திரும்பி
இடது வலது தெரியாது குடித்து
மனைவியோடு கலவி கொண்டு
இடது வலது தெரியாது குடித்து
மனைவியோடு கலவி கொண்டு
அடுத்த நாள்
அது செத்துப்போன இடத்தைக் கடந்து வந்ததர்க்கே
சாப்பிட
வேலை செய்ய
தலை வாரிக்கொள்ள
முடியவில்லையென
யோகாவிடம்
சங்கரிடம்…
அது செத்துப்போன இடத்தைக் கடந்து வந்ததர்க்கே
சாப்பிட
வேலை செய்ய
தலை வாரிக்கொள்ள
முடியவில்லையென
யோகாவிடம்
சங்கரிடம்…