Tuesday, March 15, 2011

சற்றே சிறிய சிறுகதைகள் - 2


ந்தியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது
பின்னால் நிற்பவன்
இதயத்துக்குள்ளாக கையை நுழைத்து
தர்மசங்கடத்தை அறுத்து வெளியில் எரிந்து
மிதிக்கிறான்
எவனோ ஒருவனுடயதை
முந்தைய பந்தியில் அறுத்துப் போட்டு
உட்கார்ந்திருக்கிறேன் நான்
பசியில் காத்திருந்த நாக்கு
அடுத்தவன் வயிறு வரை நீண்டிருந்தது
எந்த ____றாண்டி சொன்னது
அத்தியாவசியம் உணவு உடை உறையுள் என?எனக்கும் என் பின்னால் நிற்பவனுக்கும்
உணவு மட்டுமே என்று படுகிறது

No comments:

Post a Comment